Sunday 5 February 2012

பச்சை இரத்தம்

நாம் ஒரு மரத்தை அழித்தால் அதற்கு ஈடாக இரண்டு மரம் நட்டால் தான் நம் எதிர்காலத் தலைமுறை இப் பூமியில் உயிர் வாழும் சாத்தியம் உண்டாகும் :-)

மனிதா!
யார் உன்னை மரம்கொத்தியாக
மாற்றியது?

மரம் மனிதனைப்
புத்தனாக்கியது
மனிதனோ மரத்தை
இரத்தமாக்கினான்!

மரம் இறந்தும் கூட
சிலுவையாகி இயேசுவைச்
சுமந்தது!
ஆனால் மனிதனோ
மரத்தின் ரணங்களை
உணர்வதாய் இல்லை!

ஒரு கணம் சிந்தித்துப்பார்
உன் நிழலில் நீயே
ஒதுங்க முடியுமா?
ஆனால் மரத்தின் நிழலில்?

No comments:

Post a Comment